Wednesday, April 22, 2009

வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்;ஆராய்ச்சியில் தகவல்


குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார்.அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது.

வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும்,வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.

பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும்.இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன.

போர் பகுதிகளில் சிக்கி இருப்பவர்கள்,மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகியோருக்கும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன.

நன்றி : விடுப்பு

No comments: