Tuesday, March 31, 2009

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்






Samsung நிறுவனம் புதியவகைக் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது.

இத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப் பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்கு வந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத் தூக்க வேண்டியிராது.

குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா,இல்லை என்றால் இதை வாசியுங்கள்



ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணித்தியாலங்கள் (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள்) தினமும் நித்திரை செய்ய வேண்டுமாம். அதற்குக் குறைவாக நித்திரை கொள்பவர்களில் அவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய நித்திரையின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நித்திரை இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும் (cortisol) எனும் ஓமோனும் நித்திரையின் அளவைக் குறைத்து நாடிகளில் கல்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

எதுஎப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியாத விட்டாலும் போதிய நித்திரை என்பது குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே வேலை வேலை என்று தூக்கத்தை தொலைக்காது இரவில் போதியளவு (குறைந்தது 6) மணித்தியாலங்கள் தூங்குவதை வழங்கப்படுத்திக் கொள்வது நன்று.

குறிப்பாக பின்னரவு வரை மது அருந்திவிட்டு பின்னர் காலையில் விழித்தெழுபவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, March 30, 2009

விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்



மைக்கிரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 என்னும் இயங்கு தளத்தை தொடுதிரை வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி கணினி திரையை தொட்டு இயக்கலாம்.
கணினியின் ஒரு பகுதியில் உள்ள தகவலை வேறொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு எமது கை விரலினால் அவற்றை தொட்டு இலகுவாக நகர்த்தலாம். இதற்கு விசைபலகையினதோ அல்லது சுட்டெலியினதோ உதவி தேவையேயில்லை.

Sunday, March 29, 2009

சுடச் சுட டீ குடிக்கறீங்களா?தொண்டைப் புற்றுநோய் வரும்,உஷார்!

ஆவி பறக்கும் சூடான டீயை குடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமிருப்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான தேநீர் அருந்துவதால் உணவுக் குழாய் மற்றும் வாய்க்கும்,உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள பகுதியில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

ஈரானிலுள்ள டெக்ரான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக முதன்மை ஆராய்ச்சியாளர் ரேஸா மலேக்ஸாதே இது குறித்து தெரிவிக்கையில்,சூடான டீ பருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதன் மூலம்,தொண்டைப் புற்றுநோயைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும்,புற்றுநோயால் பாதிக்கப்படாத 571-பேரின் தேநீர் பருகும் பழக்கத்தையும் ஆராய்ச்சி செய்து இந்த முடிவை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கோப்பையில் தேநீர் ஊற்றப்பட்ட 4-நிமிஷத்திற்குள் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்குள் தேநீர் பருகுபவர்களைவிட,தேநீர் ஊற்றப்பட்ட 2-நிமிஷத்துக்குள்,அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் பருகி முடிப்பவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 5-மடங்கு அதிகமாக உள்ளதாக அந்த ஆராய்ச்சி மேலும் கூறுகிறது.

இருப்பினும் தேநீர் குடிக்கும் அளவுக்கும்,புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Friday, March 27, 2009

உலக வெப்பமுறுதல் விளைவு எதிர்பார்த்ததை விட தீவிரமானது

எதிர்பார்த்ததை விட உலக வெப்பமுறுதலால் ஏற்படும், சுற்றுச்சூழல்களுக்கு பாதமாக அமையும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று உலக வெப்பமுறுதல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள முதன்மை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2000 - 2007 வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட புதிய தரவுகளின் படி, வளிமண்டலத்தில் நிகர அளவில் அதிகரித்து வரும் காபனீரொக்சைட் மற்றும் மெதேன் வாயுக்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இந்த நிலை தோன்றி இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெருமளவு சுவட்டு எரிபொருட்களை மின்சாரத் தேவைக்காக எரித்து வருகின்றன. இச் செயற்பாடு அதிகளவு காபனீரொக்சைட்டை வளிமண்டலத்துக்குள் வெளித்தள்ளுக்கின்றது.

அயனமண்டலக் காடுகள் உலர்ந்து வருகின்றன என்றும் இதனால் காட்டுத்தீ போன்றவை ஏற்பட்டு பெருமளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்படிவுகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்

நன்றி : விடுப்பு


Thursday, March 26, 2009

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்


கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள்.தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல,கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால்,தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.

உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள்,காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.

இந்த துர்நாற்றத்திற்கு வாயோ,பற்களோ காரணம் அல்ல.வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம்.வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.

மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை நீங்களும் அடிக்கடி வாங்கி சமைத்துப் பாருங்களேன்.

நன்றி : விடுப்பு

Tuesday, March 24, 2009

ரகசியமாக கண்காணிக்க வேண்டுமா?







இப்போது நீங்கள் யாரையாவது ரகசியமாக அவருக்கு தெரியாமல் அவருடை நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்துவிட்டது ஒயர்லெஸ் வீடியோ கேமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தபடியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கேமராவை ஒட்டி விட்டால் மட்டுமே போதுமானது.

நெட்வொர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவேடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், இந்த நவீன வீடியோ கேமரா காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கேமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில், நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும். தற்போது, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த கேமரா, இன்னும் ஆறு மாதத்தில் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த கேமராவின் தொழில் நுட்ப முறை, 'அவாக்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கேமரா மிகவும் சிறிய வடிவிலானது; பேட்டரியில் செயல்படக் கூடியது. ஒயர்லெஸ் வீடியோ கேமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதை பயன்படுத்தலாம். இதை சுவர்களிலோ, வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால் போதுமானது.

இணைய தளத்தின் அடிப்படையில், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க முடியும். இதை தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். இதை பொருத்துவது மிக மிக எளிதானது. இதை பொருத்துவதற்கு ஒயர்கள் தேவையில்லை; புதிதாக சாப்ட்வேர் இணைக்கத் தேவையில்லை.

கொழுப்புச்சத்தை குறைக்கும் குண்டு உடலை மெலிய வைக்கும் முட்டை


கொழுப்புச்சத்து காரண மாக உடல் குண்டான வர் கள் பெரும் அவஸ்தைப்பட்டு ருகின்றனர். எவ்வளவோ மருந்து மாத்திரைகளை உட் கொண்டு வந்தாலும் போதிய பலன் இல்லை.

இதனால் குண்டானவர்கள் உடல் இளைக்க உடற் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இங்கிலாந்து இருதய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒரு தகவலை தெரிவித்து உள்ளது.

அதாவது தினசரி முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் மெலியுமாம்.


தினமும் காலை டிபனுக்கு பதில் 2 முட்டை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரம் இது போன்று சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து குறைந்து உடல் மெலியும். அழகான தோற்றம் பெறலாம் என்று அந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது

நன்றி :விடுப்பு


நானும் பதிவிடுகிறேன்

இதுதான் என்னுடைய முதலாவது பதிவு வாசகர் ஆகிய நீங்களும் எனது பதிவுகளை பார்த்து உங்களுடைய பின்னுட்டங்களை எனக்கு அனுப்பி வைத்தால் ரொம்ப ஆதரவாக இருக்கும்

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்